அஸ்வெசும கொடுப்பனவு – ஓகஸ்ட் வைப்பீடுகள் இன்று!
Wednesday, August 19th, 2026
.. …
ஓகஸ்ட் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவை நாளை 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேற்படி சபை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின்கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 09 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபா தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 02 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரம் ரூபா தொகையை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது
000
Related posts:
நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பாதுகாப்பு அமைச்சு!
சுகாதாரத்துறை அதன் அதிகபட்ச செயற்திறனை எட்டியுள்ளது – நாட்டை முடக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்களின்...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை தவிர்க்க சுற்றுநிருபம்!
|
|
|


