நீதிபதிகளின் ஓய்வு விவகாரம் – சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் விடுத்திருக்கு கோரிக்கை!
Wednesday, August 12th, 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிப்பது தொடர்பில் நிபுணர்கள் ஊடாக விரிவான கலந்துரையாடலை நடத்தி, தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே,இந்த கோரிக்கையை முன்வைத்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் - உலக உணவுத் திட்டம் தக...
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்த பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் உயர்ஸ்தானி...
தேர்தலின் பின் கூடவுள்ள நாடாளுமன்றம்: 225 பேரும் இருக்க மாட்டார்கள்
|
|
|


