கைதான மீனவர்களுக்கு 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
Friday, August 7th, 2026
…
நெடுந்தீவு தெற்கு குயிந்தா கடற்பரப்பில் எல்லைதாண்படி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு 11 மீனவர்களுடன் தரைதட்டிய நிலையில் படகில் இருந்த மீனவர்கள் நேற்று (06/08) கடற்படையினரால்மீட்கப்பட்டு
நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (07/08) காலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்
இதன்போது விபரங்களை பெற்றுக்கொண்ட நீதிபதி மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை (21/08) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.
0000
Related posts:
பெண் பொலிஸாருக்கு விண்ணப்பம் கோரல்!
எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்...
சுகாதாரத்துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் கட்டுப்பாடுகளைத் தளர...
|
|
|


