கைதான மீனவர்களுக்கு 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Friday, August 7th, 2026



நெடுந்தீவு தெற்கு குயிந்தா கடற்பரப்பில் எல்லைதாண்படி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு 11 மீனவர்களுடன் தரைதட்டிய நிலையில் படகில் இருந்த மீனவர்கள் நேற்று (06/08) கடற்படையினரால்மீட்கப்பட்டு
நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (07/08) காலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்

இதன்போது விபரங்களை பெற்றுக்கொண்ட நீதிபதி மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை (21/08) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.

0000

Related posts: