ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச முக்கியஸ்தர்களைச் சந்தித்த கட்சியின் மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜீவன் !
Sunday, May 17th, 2026
…….
வேலணை பிரதேச சபையின் கட்சி சார் உறுப்பினர்களூடான செயற்பாடுகள் மற்றும் பிரதேச சபையின் அமர்வில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்த முன்னாயத்தக் கூட்டம் ஒன்று இன்று (17) கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசத்தின் நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா போல் மற்றும் முக்கியஸ்தர்களது பிரசன்னத்துடன் குறித்த ஆராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள சபையின் மாதாந்த கூட்டம் தொடர்பிலும் கட்சியின் உறுப்பினர்களால் கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட விடையங்கள், நடைபெறவுள்ள சபைக் கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
71 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இலவச யூரியா உரத்தை வழங்குகிறது விவசாய அமைச்சு !
இரும்புகளை விற்பனை செய்வதற்கு சர்வதேச ரீதியில் விலை மனுக் கோரல் - போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவ...
நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு - சுகாதார அமைச்சின் க...
|
|
|


