சுதந்திர நாடாக மாறும் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமான பலுசிஸ்தான் – இந்திய ஊடகங்கள் செய்தி!
Thursday, May 15th, 2025
பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர் யார், வெளியிட்ட எக்ஸ் தள பதிவின் மூலம் இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
பலுசிஸ்தானை, பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று பலுசிஸ்தானின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ”நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, பலுசிஸ்தானியர்கள்” என்றும் ”ஐக்கிய நாடுகள் சபையும் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்தத் தடை!
சீனாவில் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் பலி!
இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் - 3 நாட்களில் 471 பேர் உயிரிழப்பு!
|
|
|


