டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிப்பு – யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!
Monday, December 23rd, 2024
யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது – “யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது. இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91 பேரும் டெங்குத் தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுவது அவசியம்.” – என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வவுனியாவில் சட்டவிரோத கும்பல்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது - நாடாளுமன்ற உறுப்பினர் தி...
இடைநிலை வகுப்புகளில் இணைக்கும் சுற்றுநிருபம் ஏப்ரல் 20 இல் வெளியாகும் - அதுவரை கடிதங்கள் வழங்கப்படாத...
பரந்தன் பகுதியில் 400 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றிய பொலீசார்!
|
|
|


