ஆரோக்கியமான பன்றியிறைச்சி விற்பனை – கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!.
Monday, December 9th, 2024
தற்போது சந்தையில் ஆரோக்கியமான விலங்குகளின் பன்றியிறைச்சி விற்பனை செய்யப்படுவதாகக் கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் காரணமாகக் கடந்த கடந்த காலங்களில் பன்றியிறைச்சி விற்பனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள கால்நடை பண்ணைகளின் உரிமையாளர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்மைய, கால்நடை வைத்தியர்களால் சான்றளிக்கப்பட்ட இறைச்சியை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியசர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
000
Related posts:
வினைத்திறனுள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|
|


