ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Tuesday, September 7th, 2021
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பதிவு செய்யப்படாத முன்பள்ளிகளின் நிலைகளை ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழு நியமிப்பு!
இலங்கையை நோக்கி நகரும் நிவர் சூறாவளி - வட பகுதியை தாக்கும் அபாயம்!
நாம் மத்திய வங்கியை கொள்ளையடிக்கவில்லை - எமது அரசு தான் ஊழலுக்கு எதிரான அரசு - அமைச்சர் ஜோன்சன் பெர்...
|
|
|


