நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு தீர்மானம்!
Friday, November 8th, 2024
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13 ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி, பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காக அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்துப் பாடசாலைகளுமு் 13ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மின்தடைக்கு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய குறைபாடே காரணம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!
ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!
|
|
|


