பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!
Wednesday, February 22nd, 2023
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவில் அங்கம் வகிப்பதற்காக தெரிவுக்குழுவினால் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபைக்கு அறிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 123 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ராதேவி வன்னியாராச்சி, ஹரின் பெர்னாண்டோ, ஜீவன் தொண்டமான், ஷெஹான் சேமசிங்க, தாரக பாலசூரிய, சி.பி.ரத்நாயக்க, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ, நாலக கொடஹேவா, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜே. சி. அலவத்துவல, சிவஞானம் ஸ்ரீதரன், ஹெக்டர் அப்புஹாமி, அகிலா எல்லாவல வருண லியனகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடாளுமன்றம் வருகின்றது கோப் அறிக்கை!
யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!
நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்த...
|
|
|


