வியட்நாமில் கடும் மழை – வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து – 20 பயணிகளை தேடும் மீட்பு பணியாளர்கள்!
Tuesday, September 10th, 2024
வியட்நாமில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய வியட்நாமின் காவ் பாங் மாகாணத்தில் பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பேருந்தில் 20 பயணிகள் வரையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து காவ் பாங் மாகாணத்தில் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மண்சரிவுகள் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
000
Related posts:
மலேசிய சிறைகளில் 9,000 வெளிநாட்டவர்கள்!
சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளின் பின் முதல்முறையாகக் குறைந்துள்ளது!
”ரஷ்யா எந்தவொரு நேட்டோ நாட்டையும் தாக்குவதற்கு முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை – 16 ரக போர் விமானங்கள...
|
|
|


