அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Tuesday, May 7th, 2024
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய(07) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன இதனை தெரிவித்தார்.
அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த தருணத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தவறான கருத்தை நாட்டுக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொண்ட கொள்கையில் தடம்புரளாத தலைவர் டக்ளஸ் தேவானந்தா - பாஷையூர் கடற்றொழிலாளர்கள்!
இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாற்றம்!
2023 / 2024 ஆம் கல்வியாண்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்றுமுதல் இணையவழி மூலம் சமர்ப்ப...
|
|
|


