உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் – பரீட்சை திணைக்களம் தகவல்!
Thursday, May 2nd, 2024
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்பதாக 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கமைய, 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மே தினவருமானத்தில் இலாபம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை
மின்தடை அறிவித்தல்!
லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


