பல்வேறு மோசடி சம்பவங்கள் – மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!
Monday, September 18th, 2023
பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அவர்களுக்கு பதிலீடாக புதிய பேருந்து நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 381 பேருந்து நடத்துனர்களை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், புதிதாக 912 பேருந்து சாரதிகளையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
“ஜனாதிபதி விளையாட்டு விருது” நிகழ்வு இன்று!
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க “ஜெய்க்கா” தீர்மானம் - ஜனாதிபதி கோட்டா...
கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு - சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.
|
|
|


