டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே நாட்டின் எதிர்கால இலக்கு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Sunday, August 13th, 2023
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதே இலங்கையின் எதிர்கால இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், மும்பையில் நடைபெற்ற “இலங்கையில் முதலீடு” என்ற மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வலுவான நிலையான பேரின பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், அதிக போட்டி நிறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்தல், விரைவான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி செல்ல தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுதல் என்பன இலங்கையின் எதிர்காலத்துக்கான பிரதான உத்திகளாகுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மஹிந்த தேசப்பிரிய சாட்சியம்!
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திற்கான அனைத்து செயன்முறை பரீட்சைகளும் இரத்து - பரீட்சைகள் திணைக்கள...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இருநாள் விடுமுறை!
|
|
|


