அடுத்த இரண்டு வாரங்களில் தடை செய்யப்படும் பொருட்கள் – அமைச்சர் நசீர் அஹமட் அறிவிப்பு!
Monday, August 7th, 2023
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர்/ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆனது நாட்டின் காற்றின் தரப் பாதுகாப்பு நிலையை அறிக்கை அளிப்பதற்கான அவசரகால பதில் செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் மேலும், சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துளளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆசிய கடற் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு இலங்கையில்!
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
உள்ளூர் தேவை அதிகரித்தபோதிலும் இலங்கை்கான தடுப்பூசிகள் திட்டமிட்டபடி வந்தடையும் – இலங்கையில் உள்ள சீ...
|
|
|


