யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதி!
Tuesday, February 23rd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நோயாளி ஒருவருக்கும் தொற்று உள்ளமை அன்டிஜன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை முன்னெடுக்கபட்ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தாதிய உத்தியோகத்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நோயார்களைப் பார்வையிட வருபவர்களுக்கு தடை விதிப்பது தொடர்பிலும் ஏற்கனவே வந்த சென்றவர்கள் தொடர்பிலும் தகவல் திரட்டப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாக மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊடகவியலாளர் லசந்தவின் சடலம் நாளையதினம் தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு!
யாழில் ஹெரோயின் போதை மாத்திரை, கஞ்சா, வாளுடன் முக்கிய நபர்கள் பொலிஸாரால் கைது!
நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துங்கள் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்து!
|
|
|


