இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் ஆர்வம் காட்டும் சினோபெக் நிறுவனம் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Wednesday, July 5th, 2023
இலங்கையில் சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் சினோபெக் நிறுவனத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு சைனா ஹார்பர் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சமஷ்டி கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிடவேண்டியது அவசியம் - சம்பிக்க ரணவக்க!
கட்டாக்காலி நாய்களை - கட்டுப்படுத்த நடவடிக்கை!
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் - மத்தி...
|
|
|


