கட்டாக்காலி நாய்களை – கட்டுப்படுத்த நடவடிக்கை!

Wednesday, March 20th, 2019

வடமராட்சி, வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பான தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்டு திரிகின்ற கட்டாக்காலி நாய்களுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தீர்மானத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் கு.கமலதாஸ் முன்வைத்தார்.

இந்நிலையில் குறித்த தீர்மானம் சில திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related posts:


இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
மதுபான விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவுக்காக காத்திருக்கும் மதுவரி...
தாமதமாக பாடசாலைகள் ஆரம்பம் - கல்வியாண்டை உரிய வகையில் நிறைவு செய்ய மாற்று வழி – கல்வி அமைச்சு நடவடிக...