மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் மீன்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை – நுகர்வோர் கவலை!
Saturday, June 24th, 2023
மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், மீன்களின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை என கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாதத்தின் முதலாம் திகதி தொடக்கம், வீட்டுத் தேவைக்கான மண்ணெண்ணெயின் விலை 50 ரூபாவினாலும், தொழில்துறைக்கான மண்ணெண்ணெயின் விலை 134 ரூபாவினாலும் குறைப்பட்டது.
எவ்வாறிருப்பினும், இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மண்ணெண்ணெய் விலைத்திருத்தத்துக்கு அமைய, மீன்களின் விலையை குறைக்க முடியாது என கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, சந்தையில் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், தாங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!
கொரோனா அச்சுறுத்தல்: பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!
வடக்கு - கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!
|
|
|
ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
பேக்கரி உற்பத்தி பொருட்களை நடமாடும் சேவையூடாக விற்பனை செய்பவர்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கொரோனா...
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதி முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போரா...


