உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எச்சரிக்கை!

Monday, June 5th, 2023

நாட்டில் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இந்த நிலையில் அரச செலவினங்கள் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன. நாட்டில் தற்போது பொருளாதாரம் மீண்டெழுந்து வருகின்றது.

2024ஆம் ஆண்டுக்கு செல்லும் போது இதனை விடவும் அதிகளவில் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக நாம் கடப்பாடுகளை கொண்டிருக்கவேண்டும் இவ்வாறான சூழலில் எதிர்காலத்தில் உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தரவுகள் தெரிவிப்பதாகவும்’ இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி - வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் ஆயத்தங்...
தகவலறியும் உரிமைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை - நீதி அமைச்சர் உறுதிபடத் தெர...
வருட இறுதிவரை நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் - மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் எதி...