அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்!
Wednesday, May 3rd, 2023
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அமைதியான முறையில் நடத்தியமைக்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறப்பாக கடமையை செய்ததாகவும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
மே தின ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் அனைத்திலும் நேற்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நச்சுத்தன்மையற்ற உணவுகளைத் தயாரிக்கும் விவசாயப் பண்ணைகள்!
உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் வழங்க பிரதமர் பரிந்துரை!
யாழ் மாவட்ட வாக்காளர் தொகையில் சரிவு - நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு!
|
|
|


