ரியோ நகருக்கு புறப்பட்டது இலங்கை பரா ஒலிம்பிக் அணி!
Saturday, September 3rd, 2016
பிரேசிலின் ரியோ நகரில் இடம்பெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணியினர் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.
198 நாடுகள் பங்குபெறும் இப்போட்டியில் 18 விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளனர். எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்போட்டிகள் இம்மாதம் 21ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 9 வீர வீராங்கனைகள் ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ரோகித்-கோஹ்லி அதிரடி: கடைசி ஓவரில் வெற்றி பெற்றது இந்தியா!
இலங்கை அணி ஜீனியர் கிரிக்கெட் காலிறுதியில் வெற்றி!
2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்கப் பரிந்துரை!
|
|
|


