தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் யமுனாநந்தா வலியுறுத்து!
Monday, April 17th, 2023
தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால், உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும்.
அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்துங்கள். அத்துடன், போதியளவு நீராகாரங்கள் அருந்துங்கள். நீர் தன்மையுள்ள வெள்ளரி பழம் போன்றவற்றை உண்ணுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக்கும் சட்டவரைவை கை விடுங்கள் - தேசிய அமைப்புக்கான ஒன்றியம்!
வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி அறுப்பு – வட்டு.கண்ணகை அம்மன் கோயிலடியில் சம்பவம்!
கடந்த ஆண்டு இலங்கைக்கு மில்லியன் டொலருக்கும் அதிகமான புதிய உதவிகளை அமெரிக்கா வழங்கியதாக இலங்கைக்கான ...
|
|
|


