இந்துக் கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலி!
Thursday, April 6th, 2023
யாழ்ப்பாணம் கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழப்பு தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உள்ளுராட்சி சபை மதிப்பீடுகளை அனுப்ப அறிவுறுத்து!
சுரக்ஷா காப்புறுதி : மாணவர்களுக்கு 777 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் அகிலவிராஜ் காரிய...
தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை - நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு!
|
|
|


