ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு தொடரும் சோகம்!
Friday, September 2nd, 2016
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
லீட்ஸ் விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களை பெற்று கொண்டது.இதன்போது ஆசார் அலி 80 ஓட்டங்களை பெற்று கொண்டார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இங்கிலாந்து அணி 4 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Related posts:
மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர்: சிந்து, சாய்னா அதிர்ச்சித் தோல்வி!
மேற்கிந்திய அணியில் மீண்டும் கைல்!
நீக்கப்பட்டார் தவான்!
|
|
|


