பிள்ளையை பாடசாலையில் விட்டு வீடு திரும்பிய தந்தை சுட்டுக்கொலை !
Wednesday, January 11th, 2023
எம்பிலிபிட்டிய – பனாமுர – ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் தமது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீதியில் மறைந்திருந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஓமல்பே பகுதியில் வசித்துவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் சேவையில் - சபையின் பிரதி பொதுமுகாம...
நாளை மாலை 5 மணிக்கு முன் காலி முகத்திடலை விட்டு வெளியேறவேண்டும் -போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் உத்த...
கொழும்பு துறைமுக நகரில் அதிநவீன வசதி கொண்ட தனியார் வைத்தியசாலை!
|
|
|


