கொழும்பு துறைமுக நகரில் அதிநவீன வசதி கொண்ட தனியார் வைத்தியசாலை!
Tuesday, April 18th, 2023
கொழும்பு துறைமுக நகரத்தில் நவீன வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆசிரி துறைமுக நகர தனியார் வைத்தியசாலைக்கும் (Asiri Port City Hospital) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதன்படி, சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அந்த மருத்துவமனைகளை நிறுவி பராமரிக்கும் வாய்ப்பை ஆசிரி துறைமுக நகர தனியார் வைத்தியசாலை (Asiri Port City Hospital) பெற்றுள்ளது. மருத்துவமனையில் சுமார் 500 படுக்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வாகனத்தின் முன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்தால் நடவடிக்கை!
ரணில் எனது சிறந்த நண்பர் - தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் எண்ணமில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி...
இலங்கையர்களில் 49 இலட்சம் பேருக்கு உணவு உதவி தேவைப்படுகிறது - ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதி...
|
|
|


