குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்யவதற்கு அமைச்சரவை அனுமதி!

Saturday, December 3rd, 2022

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விமானங்களின் காலம் நிறைவடைகின்றமையினால் அமைச்சரவை அனுமதியுடன் புதிதாக குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அடுத்த மூன்று மாதங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 11பேர் குணமடைந்தனர் - தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!
சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் - சர்வதேசத்திடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க த...
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை யாழ்.மாவட்டத்தில் அதிகரிப்பு - 742 பேர் சிகிச்சைக்குள்ளா...