இன்று இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Monday, November 14th, 2022
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் உறைபனியுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தடையினை நீக்குமாறு ரஷ்யாவிடம் ஜனாதிபதி கோரிக்கை!
மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் 25 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பம் - அமைச்சர் பவித்ரா வன்னியாரச...
29 ஆயிரத்து 34 வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவு - வீடமைப்பு அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|


