திருமலைக்கு அமைச்சர் டக்ளஸ் வியஜம் – கோணேஸ்வரம் ஆலயத்தின் பரிபாலன சபையினருடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, October 11th, 2022

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் பரிபாலன சபையினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில்,  ஆலயத்தின் சுற்றுச் சூழலில் இடம்பெறும் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், அதுதொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலைக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மதங்களின் விழுமியங்களும் நம்பிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் இருகின்ற நிலையில்,  எந்தவொரு மதத்தினதும் நம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமாயின் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
– 11.10.2022

Related posts:

நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும் - அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியி...
வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் - தமிழக உற...
சரியானவர்களை சரியான இடத்திற்கு தெரிவு செய்யும் பட்சத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறும் -...

தடுப்பூசி வழங்குவதில் மத குருமாருக்கு முன்னுரிமை - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
காக்கைதீவு - சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னி...