கெளதாரிமுனையில் ஐம்பது மில்லியன் முதலீட்டில் நவீன இறால் பண்ணை – ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, September 30th, 2022
கெளதாரிமுனை, விநாசியோடை பகுதியில் ஐம்பது மில்லியன் முதலீட்டில் அமையவுள்ள நவீன இறால் பண்ணை திட்டத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 10 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் வருடம் ஒன்றிற்கு 300 தொன் இறால் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும் அதன்மூலம், வருடம் தோறும் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று மதிபீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, கௌதாரிமுனை பிரதேசத்தினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும், சமூக மேம்பாட்டு வசதிகளும் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 30.09.2022
Related posts:
யதார்த்தத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் –டக்ளஸ் தேவானந்தா
சூரிய மின் உற்பத்தி தொடர்பில் மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது தொடர்பில் எப்போதாவது ஆராய்ந்து ப...
இரணைமடு குளத்தில் ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடப்பட்டது!
|
|
|


