புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை : ஆராயும் குழுவில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 17th, 2016

 

எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தலைமையில் குறித்த  20 பேர் உள்ளடங்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்த இலங்கையர்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் வாக்களிப்பதற்காக அவர்கள் இருக்கும் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களில் விஷேட வாக்குச்சாவடிகள் அமைத்து அவர்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

123

Related posts:

நாம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தபோது எம்மை விமர்சனம் செய்தோர்  இன்று அபிவிருத்திப் பணிகளில் த...
மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து தருமாறு அமைச்சர் டக்...

முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட கடனை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? - புனர்வாழ்வு அ...
சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படை...