அரிசி இறக்குமதியால் அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி – தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
Thursday, February 17th, 2022
அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு அரிசியின் விற்பனை மற்றும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், நுகர்வோர் இறக்குமதி அரிசியினை கொள்வனவு செய்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் தெரிவித்தார். இதனால் உள்நாட்டு அரிசியின் விற்பனை 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னதாக விற்பனை செய்யப்பட்ட விலையை காட்டிலும் தற்போது குறைவடைந்துள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் பீ.கே ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அமைச்சு செயலாளர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை!
அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய காணிகள் அரசுடமையாக்கப்படவுள்ளன.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
|
|
|


