இலங்கை நிதி தொடர்பான கோரிக்கையை விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, February 4th, 2022

இலங்கை நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி இதனைத் தெரிவித்துள்ளாரென வெளிநாட்டு ஊடகமொன்றை மேற்கோள்காட்டி செய்திகள்  வெளியாகியுள்ளன..

பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதேநேரம், நிதி அமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இலங்கை நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை வேண்டும் :யாழ்.மாவட்ட அரசாங்க அதிப...
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் - அமெரிக்காவின் தேசிய ...