உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்ப்பு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை கடந்த 2018 இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அமைச்சருக்குள்ள அதிகாரத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தமுறை உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இம்முறை அந்த தொகை எட்டுமுதல் பத்து மில்லியன் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

எமக்கு எதுவித தொடர்பும் கிடையாது - வேலணை பிரதேச சபையிடம் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் விளக்கம்!
வெளிநாட்டு வேலைக்காக 4 மாதத்தில் ஒரு இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி - எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் ...