பயணிகள் இலகுரக விமானம் விபத்து – மூவர் காயம்!
Monday, December 27th, 2021
பயணிகள் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான சேவை நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் பெண் ஒருவர் அடங்களாக மூவர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலகுரக விமானம் ஒன்று பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐநாவின் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று!
நான்கு நாள் பயணமாக சீனாவின் உயர் அதிகாரி இலங்கை வருகை – இலங்கையின் உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துர...
வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது அரச அச்சகத்தின் கடமை - தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு!
|
|
|


