வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
Thursday, May 13th, 2021
வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய செயற்பாட்டு மையத்தின் பணியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
கடற்றொழில் அமைச்சின் அங்கமாக இருக்கி்ற வடகடல் நிறுவனத்தின் யாழ். செயற்பாடுகள் தொடர்பாகவும் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், குறித்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடினார்.
மேலும், யாழ். பணியாளர்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நந்திக் கடல் புனரமைப்பு செய்யப்படவேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் குறித்த எமது எண்ணங்கள் இன்னம் மாறவில்லை நாடாளுமன்றில் செயலாளர்...
வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: ஆட்சி ஏறியவுடன் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் – கோட்டபய ராஜ...
|
|
|


