நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தலிவரை மூடுவதற்கு தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, May 7th, 2021
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் அதன் பாதிப்பின் அபாயத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கம் எடுத்துள்ள குறித்த தீர்மானத்திற்கு இணங்க சகல கத்தோலிக்க மற்றும் அங்கிலிக்கன் பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு.!
டொல்பின் மற்றும் திமிங்கிலங்களை பிடிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
ATM அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!
|
|
|


