கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!

Sunday, May 2nd, 2021

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப் பகுதியில் இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஈ தக்சலா, குருகெதர வேலைத்திட்டங்களின் மூலமாக மாணவர்கள் பயனடைய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னரும் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

பாடவிதானங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறையை மட்டுப்படுத்துவது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது

Related posts:


எல்லைதாண்டி கைதான இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் - வடமாகாண கடற்றொழ...
எரிவாயு வெடிப்பு - இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் பசில் ராஜபக்ச பணி...
அனைவரும் புத்தாண்டை மிகுந்த அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு...