எதிர்வரும் 18ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ச தலைமையில் கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்!
Monday, November 16th, 2020
கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது..
இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த முனையத்தின் கட்டுமாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த முனையத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 107 பில்லியன் ரூபாவுக்கு மேலான தொகை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு செய்வதுடன் இதனை மூன்றாண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் தொடர்பான பயிற்சி பட்டறை யாழ்ப்பாணத்தில்!
குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறு...
இலங்கை கடற்படை உதவி - பாரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்த மாலைத்தீவு கடலோர காவல்படையினர்!
|
|
|


