கொழுப்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Thursday, March 26th, 2020

கொழும்பு பேருவளை துறைமுகத்தின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.

தற்போது நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்று தெர்டபான விழிப்புணர்வுகளை அரசு பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த துறைமுகத்தின் சுகாரார பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

அத்துடன் குறித்த பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள்  மற்றும் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளிடையே காணப்பட்ட சுமுகமற்ற நிலைமைகளை இரு தரப்பினரையும் அழைத்து கேட்டறிந்துகொண்டதுடன் அவர்களுக்கிடையே ஒரு சுமுகமான நிலையை உருவாக்கியதுடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அபாயமான சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் குறித்த துறைமுகத்தின் சுகாதாரம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் அமைச்சர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது அபிலாஷை - டக்ளஸ் ...
பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது - ச...
இந்திய படகுகள் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதியளிக்கும் எந்த  திட்டமும் கடந்த காலங்கள...