சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு !
Saturday, February 15th, 2020
இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடவடிக்கை மேலும் இலகுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் மக்கள் கடுமையான சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
எனினும் போக்குவரத்து திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட திடீர் விஜயத்தை அடுத்து மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இனி வரும் நாட்களிலும் 3 மணி நேரத்திற்குள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
Related posts:
வெளிக்கள நிலையத்தின் பரீட்சை 26ஆம் திகதி ஆரம்பம்!
கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை!
சொல்வதை செய்வோம்! செய்வதைதான் சொல்வோம்!! – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
|
|
|
வேலணைப் பிரதேச கடற்றொழிலாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் - வேலணை பிரதேச தவிசாளர் கர...
கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் - சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஜ...
வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீ...


