ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிக்கும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்!
Monday, October 21st, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினம், சுமார் 4 தொடக்கம் 4.5 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று ஆணைக்குழு ஆரம்ப மதிப்பீடுகளை செய்திருந்தது.
எனினும் தற்போது தேர்தல் ஆணைக்குழு 7 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு திறைசேரியிடம் கோரியுள்ளது. 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கான செலவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பிளாஸ்ரிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு ஆராய்ந்து வருவதால், ஜனாதிபதி தேர்தலுக்கான செலவினம் மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினங்களை தேர்தல் ஆணைக்குழு இன்னும் இறுதி செய்யவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
Related posts:
பகிடிவதையின் கொடூரம் – யாழில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!
வடக்கில் இதுவரை 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – 164 பேர் மரணம் என சுகாதார சேவைகள் பணிப்...
கடவுச் சீட்டை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரி...
|
|
|


