எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!.
Saturday, February 10th, 2024
ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புகையிலைக்கு மாற்றுப்பயிராக மரமுந்திரிகை!
மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பரிதாப மரணம் – அனலைதீவில் சோகம்!
கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும் - வாகன இறக்குமதியாளர்கள்...
|
|
|


