53 சந்தேக நபர்களை 3 மாதம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
Saturday, May 4th, 2019
கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 53 பேரை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பல்வேறுபட்ட பிரிவுகளின் பிரதானிகளினால் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இவர்களிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இதுவரையில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடகப் பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் தீர்வு - ஜனாதிபதி!
விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள்: நெறிமுறைகள், சட்டப்பிரமானங்கள் மற்றும் வழிகாட்டல்கள்!
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை!
|
|
|


