கோர விபத்து: உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி!
Saturday, April 6th, 2019
நொச்சியாகம – அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வான் ஒன்று வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். வீதி செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வீதி செப்பனிடும் பணிகளுக்காக போடப்பட்டிருந்த தடைகளையும் மீறிச்சென்ற குறித்த வான், தொழிலாளர்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடலுக்குள் பாய்ந்தது ஆட்டோ!
வெங்காய செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபாடு!
29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில்!
|
|
|


