வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்!
Monday, February 11th, 2019
யாழ். மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள அரச, மற்றும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழி, முதலாவதாகவும் பெரியளவிலும் அடுத்து விரும்பிய ஆங்கில அல்லது சிங்கள மொழிகளில் பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொழும்பு தவிர்ந்த சிங்கள புறநகரங்களில் பல இடங்களில் தனிச் சிங்களத்திலேயே பெயர்ப் பலகைகள் உள்ளன. ஆனால் நாம் அதுபோலல்லாமல் எமது பகுதியில் பல இனத்தவரும் வந்து செல்வதால் தமிழைப் பெரியளவிலும் அடுத்து விரும்பிய மொழியான ஆங்கிலத்தையோ சிங்களத்தையோ பெயர்ப்பலகைகளில் இடலாம். இந்தத் தீர்மானத்தை கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
Related posts:
மரண தண்டனை அமுலுக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!
இலங்கைக்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்ககிறது தென்கொரியா !
2000 பதின்ம வயது தாய்மார்கள் பதிவு - பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சிறுவர் பாதுகாப்பு அத...
|
|
|


