இலங்கைக்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்ககிறது தென்கொரியா !

Friday, June 11th, 2021

கொவிட்-19 தொற்றை ஒழிப்பதற்காக இலங்கைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென்கொரியா தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த மருத்துவ உபகரணங்களில் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கியுள்ளதாகவும் தென்கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 ஒழிப்பிற்கான நடவடிக்கைகளின் போது இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றவுள்ளதாகவும் தென்கொரிய தூதுவர்  உறுதியளித்துள்ளார்.

முன்பதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்கொரியாவினால் இலங்கைக்கு 3 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தேவையற்ற வகையில் குளோரோகுயின் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டாம் - 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செ...
கிளிநொச்சியின் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஐவருக்கு நிதிமன்றால் தண்டப்பணம் விதிப்பு!
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை - அராஜகங்களுக்கு இடமளிக்கப்படாது – ...