இலங்கைக்கு புதிய இராஜதந்திரிகள் பலர் நியமனம்!

Saturday, February 2nd, 2019

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12 இராஜதந்திரிகளும் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் இந்த நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்லோவாகியா, பெலரஸ், மாலி, ஆர்மீனியா, சால்வடார், கம்போடியா, மாலைத்தீவுகள், இஸ்ரேல், ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் இதன்போது நியமனக்கடிதங்களை கையளித்துள்ளனர்.

அத்துடன் கயானா , உகாண்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளின் புதிய உயர்ஸ்தானியர்களும் தமது நியமனக்கடிதங்களை கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களிக்க முல்லை மக்கள் இனியும் தாயாராக இல்லை – ஈ.பி.டி.பியின் வ...
பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடாவிடமி...
ரஷ்ய போர் விமான தயாரிப்பு ஆலை, கடற்படை தளங்களுக்கு கிம் ஜோங் உன் விஜயம் - ஆயுதப் பரிமாற்றத்தை உறுதி...

2 ஆவது நாளாகவும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் சன்ன...
வறுமையால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் பெற்றோர் – வெளியானது அதிர்ச்சி கணிப்பு!
நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது - ஜனாதிபதியின் சிரேஷ்ட ...